• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
– 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டம் அதேபோன்று 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் என்பன சமர்பிக்கப்படும் போது அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மறுசீரமைப்பதற்கான பிரேரிப்பானது மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிணங்க, அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்குத் தேவையான வசதிகளை செய்வதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரசாங்க தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்படவுள்ள நிறுவனங்களில் சில நிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமான கம்பனிகளாவதோடு, இத்தகைய சில கம்பனிகளின் பெரும்பான்மைப் பங்குகள் அரசுக்குச் சொந்தமாகவுள்ளது. அதேபோன்று, சில அரச தொழில்முயற்சிகள் கூட்டுத்தாபனங்களாக செயற்படுகின்றன. இந்த நிலைமையின் கீழ் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 100 சதவீத பங்குகளின் உரிமை திறைசேரி செயலாளருக்கு உரியதாகும் விதத்தில் திறைசேரியுடன் இணைக்கப்பட்ட தாய் கம்பனியொன்றை தாபிப்பதற்கும் மறுசீரமைப்பு சார்பில் இனங்காணப்படும் அரச தொழில்முயற்சிகளை குறித்த தாய் கம்பனியின் துணைக் கம்பனிகளாக பதிவு செய்வதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு' நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.