• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொருளாதாரத்தின்பால் மலையக தமிழ் சமூகம் வழங்கிவரும் பங்களிப்பினை பாராட்டுதல்
- சுமார் 200 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்த மலையக தமிழ் சமூகம் மத்திய, சப்பிரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களை மையப்படுத்தி குடியிருப்பதோடு, அவர்கள் பல்வேறு விதத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களுடைய பங்களிப்பினை வழங்குகின்றனர். அவர்களுடைய பங்களிப்பானது பெருந்தோட்ட துறையின் மொத்த வருமானத்தின் 1/3 ஆகும். 2023 பெப்ரவரி மாதத்தில் மலையக தமிழ் சமூகத்தவர்களின் முதற்குடிகள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும் ஏனைய உரிய அரசாங்க நிறுவனங்களும் இணைந்து அவர்களுடைய வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் நோக்கில் இனங்காணப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.