2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகமொன்றைத் தாபித்தல் - புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்பினை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்காக மத்திய ஒருங்கிணைப்பு நிலையமொன்றாக செயலாற்றுவதற்கு புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகமொன்றைத் தாபிப்பதற்கு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் 2022 இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. இதற்கிணங்க, வௌிநாடுகளில் வசிக்கும் சுமார் 03 மில்லியன் இலங்கையர்களி்ன பங்களிப்பினை நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் உத்தேச "புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகத்தை" சனாதிபதி செயலகத்தின் கீழ் தாபிப்பதற்கும் இந்த அலுவலகத்தின் பணிகளை முறையாக நடாத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |