• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பட்டயம் பெற்ற கப்பல் முகவர்களின் நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
- இலங்கை பட்டயம் பெற்ற கப்பல் முகவர்களின் நிறுவனம் இங்கிலாந்தின் பட்டயம் பெற்ற கப்பல் முகவர் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, முழு நேர உறுப்பினர்களையும் துணை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான நோக்கமாவது கப்பல் முகவர்களின் தொழில் தேர்ச்சியினை உறுதிப்படுத்துதல் தொழில் தேர்ச்சியினை அதிகரித்தல் என்பனவாகும். அதேபோன்று கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், மாநாடு மற்றும் செயலமர்வுகள் மூலம் உறுப்பினர்களுக்கு துறைசார் தொழில் பயிற்சி தேர்ச்சியினை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த துறையின்பால் அக்கறையுள்ள இளைஞர் சமூகத்திற்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குவதும் இந்த நிறுவனத்தின் நோக்கங்களாகும். இதன் பணிகளை மிக முறையாகவும் பயனுள்ள வகையிலும் நடாத்திச் செல்லும் பொருட்டு பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிக்கும் பொருட்டு மாத்தறை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன அவர்களினால் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையொன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) ஆம் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த சட்டமூலத்தை சிபாரிசு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.