2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் உதவி கருத்திட்டத்தின் கடன் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் – ஆசிய அபிவிருத்தி நிதியம் மற்றும் தூய்மை வலுசக்தி நிதியிடல் ஒத்துழைப்பு வசதிகள் மற்றும் வறுமை ஒழிப்பு யப்பான் நிதியத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள இரண்டு கொடைகளின் கீழ் மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் உதவி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கருத்திட்டத்தின் பொதி 4 இன் கீழ் பணிகளை பூர்த்திசெய்யும் திகதியை 2023‑11‑29 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேவையான நிதியினை ஏற்பாடு செய்து கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வசதிகளின் செல்லுபடியாகும் காலத்தை 2024‑03‑31 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |