2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய கலாபவனத்தை புனரமைத்து பாதுகாக்கும் பணிகளுக்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல் - தேசிய கலாபவனத்தை புனரமைப்பு பணிகளை இந்த ஆண்டில் பூர்த்திசெய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நாட்டில் நிலவிய நிலமைகள் காரணமாக இந்த புனரமைப்பு பணிகளை பூர்த்திசெய்ய முடியவில்லை. உரிய புனரமைப்பு பணிகளில் சுமார் 80 சதவீதம் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளதோடு, தொடர்ந்தும் மீதி வேலைகளை பூர்த்திசெய்வதற்கு மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிட கலை பீடத்தின் கருத்திட்ட ஆலோசனை பிரிவினால் உரிய வரைபடம் மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, மீதி புனரமைப்பு பணிகளை 2023 ஆம் ஆண்டில் பூர்த்திசெய்வதற்கு இயலுமாகும் வகையில் நிதி ஏற்பாடுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |