• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நிலையமொன்றை மொனராகலை மாவட்டத்தில் தாபித்தல்
- மொனராகலை மாவட்டம் புவியியல் ரீதியில் இரண்டாவது பெரிய மாவட்டமாக இருந்தாலும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எந்தவொரு அலுவலகமோ பயிற்சி நிலையமோ இந்த மாவட்டத்தில் இயங்கவில்லை. இந்த மாவட்டத்திற்கு அண்மையிலுள்ள பயிற்சி நிலையங்களாவன பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பயிற்சி நிலையம், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்கல்லை பயிற்சி நிலையம் மற்றும் அம்பாறை மாவட்ட பயிற்சி நிலையம் என்பனவாகும். தற்போது திவிநெகும திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள மொனராகலை பிபிலை வீதியில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்தினை ஆரம்பிப்பதற்காக பயன்படுத்தும் சாத்தியம் நிலவுகின்றதோடு, இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வௌிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்குத் தேவையான பயிற்சி வசதிளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பு நிலவிகின்றது. இதற்கிணங்க, தற்போது திவிநெகும திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள மொனராகலை பிபிலை வீதியில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தையும் மனையிடத்தையும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.