• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவுஸ்திரேலியா தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2022-2027
- அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிதி உதவியளிக்கப்படும் அவுஸ்திரேலியா தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் 26 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்நாட்டு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மூலம் மாற்றமொன்றை உருவாக்குவதற்கும் நிலைபேறான அபிவிருத்தி குறியிலக்கினை அடையும் பொருட்டு கூட்டு அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக கொடையானது வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 2017 ஆம் ஆண்டில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கால எல்லையானது தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் 5 வருட காலப்பகுதிக்கு இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுத்தும் பொருட்டு கூட்டு உடன்பாட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.