• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கடற்படை நீர்நிலை ஆய்வு சேவையினை தேசிய மட்டத்தில் நடாத்திச் செல்வதற்கான சட்ட அதிகாரத்தை கையளித்தல்
- இலங்கையின் உள்நாட்டு நீர் பரப்பிலும் அதற்கே உரித்தான பொருளாதார வலயத்திலும் சமுத்திர நீர்நிலை ஆய்வு பணிகள் கடற்படைக்கு உரியதல்லாத பணியொன்றாக இலங்கை கடற்படைக்கு கையளிப்பதான பிரேரிப்பு 2022‑09‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, இந்த பிரேரிப்பு சம்பந்தமாக மேலதிக விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் தலைமையில் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த உபகுழுவின் சிபாரிசின் பிரகாரம் இலங்கையின் உள்நாட்டு நீர் பரப்பிலும் அதற்கே உரித்தான பொருளாதார வலயத்திலும் சமுத்திர நீர்நிலை ஆய்வு பணிகள் கடற்படைக்கு உரியதல்லாத பணியொன்றாக இலங்கை கடற்படைக்கு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கையளிப்பதற்கும் இந்த விடயம் சம்பந்தமாக செயலாற்றும் சகல நிறுவனங்களும் இணைந்து செயலாற்றுவதற்கு தேசிய நீர்நிலை ஆய்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.