• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022-2030 காலப்பகுதிக்கான தேசிய சுற்றாடல் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- தேசிய சுற்றாடல் கொள்கைக்கு 2022‑06‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தேசிய சுற்றாடல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளுக்கு அமைவாகவும் 21 ஆம் நூற்றாண்டின் சுற்றாடல் சவால்களின்பால் கவனம் செலுத்தியும் உரிய சகல தரப்பினரினர்களினதும் பங்களிப்பினைப் பெற்றுக் கொண்டு சுற்றாடல் அமைச்சினால் 2022-2030 காலப் பகுதிக்கான தேசிய சுற்றாடல் செயற்பாட்டுத் திட்டமானது தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் பொருட்டு தேசிய மட்டத்தில் கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் கூட்டு சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி கொள்கை பற்றிய குழுவினை தாபிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.