• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதியின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
- அந்நிய செலாவணி சந்தையில் உருவாகக்கூடிய மறைமுகமான தாக்கங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சில மூலதன கொடுக்கல்வாங்கல்களுக்குரியதாக அந்நிய செலாவணியை நாட்டிலிருந்து வௌியே அனுப்புவதை இடைநிறுத்துவதற்கு / மட்டுப்படுத்துவதற்கு அந்நிய செலாவணி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக அடிக்கடி ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்டுள்ளன. தற்போது வௌியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதியின் செல்லுபடியாகும் காலம் 2022‑12‑29 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. ஆதலால், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வௌியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதியின் செல்லுபடியாகும் காலத்தை 2022‑12‑30 ஆம் திகதியிலிருந்து மேலும் 06 (ஆறு) மாத காலத்திற்கு நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.