2022-11-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வௌிப்படுத்துதல் தொடர்பான சைபர் குற்றங்கள் பற்றிய சமவாயத்தின் இரண்டாவது மேலதிக நெறிமுறையில் கைச்சாத்திடுதல் (புடாபஸ்ட் சைபர் குற்றம் தொடர்பிலான சமவாயம்) - 'புடாபஸ்ட் சைபர் குற்றம் தொடர்பிலான சமவாயம்' என அழைக்கப்படும் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வௌிப்படுத்துதல் தொடர்பான சைபர் குற்றங்கள் பற்றிய சமவாயத்தின் ஒரு தரப்பாக இலங்கை கைச்சாத்திட்டுள்ளதோடு, இந்த சமவாயமானது 2015‑09‑01 ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது மேலதிக நெறிமுறை சார்பில் 2022‑11‑30 ஆம் திகதியன்று பிரான்ஸ் புடாபஸ்ட் நகரத்தில் கைச்சாத்திடும் விழா நடாத்தப்படவுள்ளதோடு, இதன் போது குறித்த நெறிமுறையில் கைச்சாத்திடுவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்ரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |