2022-11-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிலைபேறுடைய அபிவிருத்தி, ஒத்துழைப்பு, பங்குடமை மற்றும் பொருத்தமான தொழினுட்பம் சார்பில் நீர் தொடர்பிலான சர்வதேச மாநாடு - 2022 - 2022‑12‑14 ஆம் திகதியிலிருந்து 2022 ‑12‑16 ஆம் திகதிவரை நிலைபேறுடைய அபிவிருத்தி, ஒத்துழைப்பு, பங்குடமை மற்றும் பொருத்தமான தொழினுட்பம் சார்பில் நீர் தொடர்பிலான சர்வதேச மாநாடு 2022 ஐ ஏற்பாடு செய்வதற்கு தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் தொடர்புபட்ட தொழில்சார்பாளர்கள், வௌிநாட்டு பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியாலாளர்களை ஒன்று சேர்த்தல், ஆராயச்சிக்கான கருத்துக்கள் மற்றும் அறிவினை பகிர்ந்து கொள்ளல், நீர் தொழில்சார்பாளர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளில் நீர் துறைசார்ந்த அனுபவங்கள் உட்பட வெற்றிகளை பரிமாறிக் கொள்தல் போன்ற நோக்கங்களை இந்த மாநாட்டினை நடத்துவதன் மூலம் வெற்றிகொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, உரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களை இணைத்துக் கொண்டு உத்தேச மாநாட்டினை நடாத்தும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |