2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உத்தேச வங்கி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் - இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தப்படும் நிதி நிறுவனங்களின் பிணக்குகளை முகாமைத்துவம் செய்யும் கட்டமைப்புகளின் கீழ் வங்கியின் தீர்வு செயற்பாடுகளை பலப்படுத்தும் தேவை அவசர மற்றும் முன்னுரிமை பணியொன்றாக இலங்கை மத்திய வங்கியானது இனங்கண்டுள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்தும் பொருட்டு தீர்வு கட்டமைப்பினை பலப்படுத்தும் தேவை சர்வதேச நாணய நிதியத்தினாலும் உலக வங்கியினாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் முழுமையான புதிய வங்கி சட்டமொன்றை விதிக்கப்படுவதில் காணப்படும் பிரச்சினையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகளின் தீர்வு, வைப்பு காப்புறுதித்திட்டம் மற்றும் உரிமம் பெற்ற வங்கிகளை முடிவுறுத்துதல் / கலைத்து மூடுதல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்திற்கு குறைநிரப்பொன்றாக உத்தேச வங்கி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஆரம்ப சட்டமூலமொன்று இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் ஆரம்ப சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |