2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்ளூராட்சி அதிகாரசபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் - தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பினை வழங்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் க வனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்குரியதாக கொழும்பு மவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரேம்நாத் ஶ்ரீ தொலவத்த அவர்களினால் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு நல்கி மொத்த இளைஞர் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் அவர்களுடைய அபிலாசைகளை அடைவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கில் உள்ளூராட்சி அதிகாரசபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டத்தில் தற்போதுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் விதத்தில் முதலாவது நியமனப்பத்திரத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 சதவீதத்திற்கு குறையாத எண்ணிக்கையினரையும் இரண்டாவது நியமனப்பத்திரத்திற்கு அமைவாக தெரிவு செய்து அனுப்பவேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 சதவீதத்திற்கு குறையாத எண்ணிக்கையினரையும் கொண்ட இளம் பிரதிநிதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளூராட்சி அதிகாரசபைகள் கட்டளைச்சட்டத்தை திருத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |