• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மொரிஷியஸ் குடியரசுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை
- 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையிலிடப்பட்ட வேறு நாட்டு பிரசையொருவருக்கு அவர் பிரசையாகவுள்ள நாட்டில் அவருக்கான தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோன்று ஏதேனும் நாடொன்றில் சிறையிலிடப்பட்டுள்ள இலங்கை பிரசையொருவருக்கு அவருடைய மீதி தண்டனைக்காலத்தை கழிப்பதற்கு மீண்டும் இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டத்திலுள்ளன. இவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இலங்கைக்கும் உரிய மற்றைய நாட்டிற்கும் இடையில் உடன்படிக்கை யொன்றைச் செய்து கொண்டிருப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, இலங்கைக்கும் மொரிஷியஸ் குடியரசுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கையினை செய்து கொள்ளும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.