2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை தேசிய மருந்துக் கொள்கையை திருத்துதல் - 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட தேசிய மருந்துக் கொள்கையானது பிரகடனப்படுத்தப்பட்டு தற்போது பதினைந்து வருடங்கள் கடந்துள்ளதோடு, சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் குறித்த கொள்கையை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படும் குழுவொன்றினால் தேசிய மருந்துக் கொள்கையை திருத்தும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |