2022-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய உயிர்கோள காப்பு தினத்தை பிரகடனப்படுத்தல் - ஒவ்வொரு ஆண்டும் நவெம்பர் மாதம் 03 ஆம் திகதி 'உயிர்கோள காப்பு தினமாக' யுனெஸ்கோ பொதுச் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்கோள காப்பு தொடர்பில் ஊக்குவிப்பதற்கு இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென யுனெஸ்கோ அமைப்பானது சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டும் நவெம்பர் மாதம் 03 ஆம் திகதியை 'தேசிய உயிர்கோள காப்பு தினமான' பிரகடனப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |