2022-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிதி ஆணைக்குழுவினால் மாண்புமிகு சனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்குரிய சிபாரிசுகள் - இலங்கை அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி ஆணைக்குழுவானது 2023 ஆம் நிதி ஆண்டிற்கான சிபாரிசுகளை மாண்புமிகு சனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளது. இதற்கிணங்க, மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நிதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதன் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கையினை எடுப்பதற்கும் அரசியலமைப்பின் 154ண(7) ஆம் உறுப்புரையின் பிரகாரம் இந்த சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |