2022-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ரத்தனதிஸ்ஸ சமாதான மன்ற (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - கல்கமுவ, பாலுகடவல ஶ்ரீ வாபிகாராமாதிபதி வணக்கத்துக்குரிய எரியாவே ரத்தனதிஸ்ஸ தேரோ அவர்களினால் நிறைவேற்று பணிப்பாளர் பதவியை வகிக்கும் ரத்தனதிஸ்ஸ சமாதான மன்ற (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தை தனிப்பட்ட உறுப்பினர் பிரேரிப்பொன்றாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யூ.கே.சுமித் உடுகும்புர அவர்களினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிலையியல் கட்டளை 52(06) இலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராக இந்த சட்டமூலம் சம்பந்தமான அறிக்கையொன்றினை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சருக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க இந்த சட்டமூலத்தை சிபாரிசு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |