2022-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த கூட்டம் - 2022‑09‑29 ஆம் திகதியன்று பிலிப்பைன்ஸின் மனிலா நகரத்தில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்கள் கலந்துகொண்டதோடு, இந்த வங்கியின் நிர்வாக சபையின் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக சனாதிபதி அவர்களினால் கூட்டத்தின் வர்த்தக அமர்வில் தலைமைதாங்கி மேற்கொண்ட உரையின் போது முக்கியமாக வலியுறுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரும் யப்பான் நிதி அமைச்சரானவருடனும் அதேபோன்று பிலிப்பைன்ஸ் சனாதிபதியுடனும் மேற்கொண்ட இருதரப்பு கலந்துரையாடல்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |