2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கூரை மீது பொருத்தப்படும் சூரிய பலகங்களுக்கான கட்டணங்களைத் திருத்துதல் - கூரைகளின் மீது பொருத்தப்படும் சூரிய பலகங்களின் மூலம் தற்போது சுமார் 580 மெகாவொட் தேசிய மின்சார முறைமையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, மின்சார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார உற்பத்தியை விரிவுபடுத்தும் நீண்டகால திட்டத்திற்கு அமைவாக மேலும் சுமார் 1,800 மெகாவொட் மின்சார ஆற்றல் இதன் மூலம் பெற்றுக் கொள்ளும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ஊக்குவிப்பொன்றாக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கட்டணங்களைத் திருத்துவதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |