• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அனுப்பீட்டு மற்றும் விநியோக வலையமைப்பின் அபிவிருத்தி மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
- இந்த கருத்திட்டத்திற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையிடமிருந்து 24,930 மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான கடன் உடன்படிக்கையானது 2015‑08‑11 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையின் செல்லுபடியாகும் காலம் 2022‑10‑28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக கருத்திட்டத்தை திட்டமிடப்பட்டவாறு நடைமுறைப்படுத்துவதற்கு இயலாமற்போயுள்ளமையினால் உரிய கடன் தொகையின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க வேண்டியுள்ளது. இதற்கிணங்க இந்த கடன் தொகையின் செல்லுபடியாகும் காலத்தை 2026‑04‑28 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.