• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டகோவைக்கான திருத்தம் (XXX ஆம் அத்தியாயம் - மரண விசாரணை)
- மரண விசாரணை நடாத்துவது சம்பந்தமாக நடைமுறையிலுள்ள சட்டங்கள், நடவடிக்கைமுறைகள் மற்றும் செயல் என்பன தொடர்பில் பொருத்தமான திருத்தங்களை இனங்கண்டு சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பேராசிரியர் (திரு) ரவீந்திர பெர்னாண்டோவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கு திருத்தங்களை செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையைத் திருத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.