• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புலம்பெயர் பணியாளர்கள் சட்டபூர்வமான வழிகளின் ஊடாக அனுப்பீடுகளை செய்வதற்கு ஊக்குவிப்புகளை வழங்குதல்
- வௌிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை புலம்பெயர் பணியாளர்கள் சட்டபூர்வமான வழிகளின் ஊடாக அனுப்பீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கும் நோக்கில் இனங்காணப்பட்டுள்ள சலுகைகளை வழங்கும் பொருட்டு 2022‑08‑08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, தகைமை பெறும் புலம்பெயர் பணியாளர்களுக்கு 25,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட உச்சத்தின் கீழ் இரண்டு சக்கர மின்சார வாகனமொன்றையும் 65,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட உச்சத்தின் கீழ் நான்கு சக்கர முழுமையான மின்சார வாகனமொன்றையும் இறக்குமதி செய்வதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட புலம்பெயர் பணியாளர்கள் வௌிநாடுகளில் உழைக்கும் அந்நிய செலாவணியை இலங்கைக்கு அனுப்புவதனை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள பின்வரும் நடவடிக்கைகள் சார்பில் அமைச்சரவையின் உடன்பாட்டினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

* 2023‑04‑30 ஆம் திகதிவரை அல்லது வாகனமொன்றினை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பிக்கும் திகதிவரை அனுப்பப்படும் அந்நிய செலாவணி பெறுமதியிலிருந்து 50 சதவீதம் வரை CIF பெறுமதியுடன் கூடிய இரண்டு சக்கர மின்சார வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்.

* 2022‑05‑01 ஆம் திகதியிலிருந்து 2023‑12‑31 ஆம் திகதிவரை இந்நாட்டிற்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணி பெறுமதியிலிருந்து 50 சதவீதம் வரை CIF பெறுமதியுடன் கூடிய நான்கு சக்கர மின்சார வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்.