• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வழங்கல் சங்கிலித் தொடர் தினத்தினைப் பிரகடனப்படுத்துதல்
- மூலப்பொருட்களை இறுதி உற்பத்தியாக மாற்றும் முழுமையான செயற்பாட்டினை வழங்கல் சங்கிலித் தொடர் முகாமைத்துவமாக குறிப்பிடப்படுவதோடு, இதன் மூலம் நுகர்வோரின் பெறுமதியினை அதிகரிப்பதற்கும் சந்தையில் போட்டிகரமான நலன்களைப் பெற்றுக் கொள்வதற்குமாக வர்த்தகமொன்றின் வழங்கல் பிரிவின் செயற்பாடுகளை முனைப்புடன் முறைப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும். வழங்கல் சங்கிலித் தொடர் அபிவிருத்தியின் முக்கியத்துவம் தொடர்பில் உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கிடையில் அறிந்துகொள்வதை அதிகரிக்கும் நோக்கில் தேசிய வழங்கல் சங்கிலித் தொடர் தினமொன்றை பிரகடனப்படுத்துவது பொருத்தமானதென வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவ நிறுவனத்தினால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டும் ஒக்றோபர் மாதம் 24 ஆம் திகதியை 'தேசிய வழங்கல் சங்கிலித் தொடர் தினமாக' பிரகடனப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.