2022-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமானசேவைகள் ஒப்பந்தம் - இலங்கைக்கும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1951 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, விமானசேவைகள் உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடியான பயணிகள் மற்றும் சரக்கு விமான பயணங்களை ஆரம்பிப்பதற்கு வசதிகள் செய்யப்படும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா, கல்வி, வர்த்தகம், முதலீடு, கமத்தொழில் மற்றும் காலாசார உறவுகள் மேலும் விருத்தியடையும். இதற்கிணங்க இருநாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் உடன்பாடு காணப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |