2022-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நல்லிணக்கம் பற்றிய அமைச்சரவை உப குழுவைத் தாபித்தல் - இலங்கையில் பல்வேறுபட்ட இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பொருட்டும் வடக்கு கிழக்கு மோதல்களின் பின்னர் மீளக் குடியமர்த்தல், காணி மற்றும் காணாமற்போனோர் சம்பந்தமாக மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட நல்லிணக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவைத் தாபிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்கள், பிரதம அமைச்சர்; * மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடற்றொழில் அமைச்சர்; * மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்கள், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்; * மாண்புமிகு அலி சப்ரி அவர்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் |