• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் மனையிடங்களின் உடைமையை மீளப் பெற்றுக் கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
- குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் மனையிடங்களின் உடைமையை மீளப் பெற்றுக் கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை விதிப்பதற்காக சட்டமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.