2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொரிய அரசாங்கத்தின் உதவியின் மீது குளியாப்பிட்டிய நாராங்கல்லையில் தாபிக்கப்படவுள்ள தொழினுட்ப பாடத்திட்டத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல் - தொழினுட்ப பாடத்திட்டத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரியொன்றை கொரிய அரசாங்கத்தின் உதவி மற்றும் உள்நாட்டு நிதியின் கீழ் குளியாப்பிட்டிய நாராங்கல்லையில் தாபிப்பதற்கு 2017‑01‑18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆயினும் பல்வேறுபட்ட காரணங்களின் மீது 2021 நவம்பர் மாதம் முடிவுறும் வரை கொரிய சருவதேச ஒத்துழைப்பு முகாவராண்மைக்கு கையளிக்கப்பட் நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு இயலாமற்போயுள்ளது. இந்த நிர்மாணிப்பு பணிகளை நேரடி ஒப்பந்தமொன்றாக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்கு கொரிய சருவதேச ஒத்துழைப்பு முகாவராண்மை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க உரிய ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |