• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம் (101 ஆம் அத்தியாயம்) (205 ஆம் பிரிவு)
- வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு வழக்கு தீர்ப்பின் அல்லது தீர்ப்பு பிரகடனங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்குவதற்குரியதாக குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையை (101 ஆம் அத்தியாயம்) (205 ஆம் பிரிவு) திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரைவதற்கு 2022‑01‑18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.