2022-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாடசாலைகளுக்கான மதிய உணவு நிகழ்ச்சித்திட்டம் - அரசாங்கத்தினால் வருடாந்தம் சுமார் 4 பில்லியன் ரூபா செலவில் 7,926 பாடசாலைகளில் 1.08 மில்லியன் மாணவர்களை குறியிலக்காகக் கொண்டு பாடசாலைகளுக்கான மதிய உணவு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வறுமை ஒழிப்பு கொள்கையின் கீழ் 'பிரஜைகள் எவரும் உணவின்றி பசியில் இருத்தல் ஆகாது' என்னும் நோக்கத்தினை அடையும் பொருட்டு குறியிலக்காகக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அரசாங்கத்தினால் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப் படுகின்றது. இதன்கீழ் வறுமை மற்றும் போசாக்கு தொடர்பில் மாவட்ட மட்டத்தில் நிலவும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தேவையான நிதியினை வௌிநாட்டு கொடைகள் மூலம் பெற்றுக் கொண்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாடசாலைகளுக்கான மதிய உணவு நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுப்படுத்தி மேலும் சுமார் ஒரு மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போசாக்குடன்கூடிய மதிய உணவு வழங்கும் பொருட்டு உரிய பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |