2022-10-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுங்க கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்பவற்றைத் திருத்துதல் - சுங்க கட்டளைச் சட்டத்தின் 47 ஆம் 57 ஆம் பிரிவுகள் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவு என்பவற்றை திருத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுங்க கட்டளைச் சட்டத்தின் 153 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகள் காரணமாக பொருட்களை பறிமுதல் செய்தல் மற்றும் தண்டனைகளை விதித்தல் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறும் வருமானம் மிகுந்த குறைந்த மட்டத்தில் நிலவுகின்றமையினால் குறித்த பிரிவினை திருத்துவதற்கான பொருத்தமான நிலைமை அரசாங்க கணக்குகள் குழுவினால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அதேபோன்று இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சார்பில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நடவடிக்கையொன்றாக சுங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் குறித்த விசாரணைகளை முற்றாக்குவதற்கு நியதிச்சட்ட ரீதியிலான காலவரையறை என்பவற்றை விதித்துரைக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பொருத்தமான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி மேலும் சுங்க கட்டளைச் சட்டம் மற்றும் அரசிறை பாதுகாப்பு சட்டம் என்பவற்றைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |