• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு காப்புறுதி உரித்துக்களை வழங்கும் பொருட்டு காப்புறுதி நிறுவனங்களை தெரிவு செய்வதற்கான பெறுகை
- புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு காப்புறுதி காப்பீடுகளை வழங்குவதற்குப் பொருத்தமான காப்புறுதி நிறுவனங்களை தெரிவு செய்வதற்காக சர்வதேச ரீதியில் போட்டி கேள்வி கோருவதற்காக 2021‑05‑17 திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச காப்புறுதி காப்பீட்டுக்காக அரச நிதி செலவிடப்படாததோடு, புலம்பெயர் இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கு தொழில் வழங்குகின்ற தொழில் வழங்குநரால் இலங்கை அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்படுகின்ற காப்புறுதி நிறுவனமொன்றின் மூலம் குறித்த காப்புறுதிக் காப்பீட்டை வழங்க வேண்டும். இதற்கிணங்க, பிரேரிப்புகளை சமர்ப்பித்துள்ள 09 காப்புறுதி நிறுவனங்களிலிருந்து அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக்குழுவினால் 06 காப்புறுதி நிறுவனங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. இந்த காப்புறுதி நிறுவனங்களுடன் முறையான ஒப்பங்களை செய்து கொள்வதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அதிகாரத்தை கையளிக்கும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.