• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் நோக்கங்களுக்காக Glyphosate இறக்குமதி செய்தல்
- அரசாங்கத்தினால் Glyphosate இறக்குமதி செய்வதனை தடை செய்தும் / மட்டுப்படுத்தியும் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தால் அனைத்துவித விவசாய நடவடிக்கைகளுக்கும் கடும் பாதிப்பு நேர்ந்துள்ளதோடு, இதன் விளைவாக விவசாய உற்பத்திகளில் வீழ்ச்சியும் அதேபோன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலைமையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 2022/2023 பெரும்போகத்தில் விவசாய நடவடிக்கைகளை மிகப் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கு இயலுமாகும் விதத்தில் தேவைக்கேற்ப அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்காகவும் Glyphosate பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்குவது பொருத்தமானதென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆறு (06) மாத காலத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான Glyphosate இறக்கமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.