2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒளிபரப்பு அதிகாரசபை சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் - இலங்கையில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் புதிய ஊடகங்களில் உள்ளடக்கங்களை ஒழுங்குறுத்துவதற்காக தற்போது அடிப்படைச் சட்டமொன்று இல்லாததோடு, இதன் காரணமாக அவ்வாறான ஊடகங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போதும், குறித்த ஊடகங்களினால் செவிப்புல கட்புல உள்ளடக்கங்களை ஒளி ஒலிபரப்பும் போது ஒருசில சந்தர்ப்பங்களில் பலதரப்பட்டவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. ஒருசில ஊடகங்கள் தார்மீகமற்ற முறையில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வுக் கருத்துக்களை வௌிப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால் அண்மைக் காலங்களில் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆதலால் பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை உயர்வாகப் பாதுகாத்து தொழிநுட்ப ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தற்போது ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களையும் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறும் ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும், மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஒழுக்கநெறிக் கோவையை அறிமுகப்படுத்தக் கூடிய வகையில் புதிய ஒளி ஒலிபரப்பு சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக வெகுசன ஊடாக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. |