• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விலங்கு உணவு உற்பத்திக்காக சோளம் இறக்குமதி செய்தல்
- விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் சுமார் 600,000 மெற்றிக்தொன் சோளம் தேவைப்படுவதோடு, தற்போது சந்தையில் சோளத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. 2022 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதியன்றுக்கு முன்னர் உணவு உற்பத்திக் கம்பனிகள் மற்றும் விலங்கு உணவு மூலப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஊடாக 225,000 மெற்றிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், தற்போது நிலவுகின்ற அந்நிய செலாவணிப் பற்றாக்குறை காரணமாக யூன் மாத இறுதியில் 38,000 மெற்றிக்தொன் சோளம் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ சோளம் 220/- ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், இதன் காரணமாக விலங்கு உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கிணங்க, கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளும் அதிகரித்துள்ளன. கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழிக் குஞ்சு இனப்பெருக்கம் செய்யாது முட்டை விற்பனை மற்றும் கோழி வளர்ப்பிலிருந்து விலகியிருப்பதன் காரணமாக எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்புத் துறையில் பாரிய நெருக்கடி ஏற்படக்கூடுமென அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள, விலங்கு உணவு உற்பத்திக்குத் தேவையான சோளம் அல்லது வேறு பொருத்தமான தானிய வகை 25,000 மெற்றிக்தொன் இறக்குமதி செய்வதற்கு உணவு ஊக்குவிப்பு சபைக்கு அனுமதி வழங்குவதற்காக கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.