• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் மாலைதீவு குடியரசிற்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
- ஒருங்கிணைந்த விசாரணைகளை மேற்கொள்ளும் போது எதிர்கொள்கின்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு இயலுமாகும் வகையிலும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் மாலைதீவு குடியரசிற்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையினை செய்து கொள்ளும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.