2022-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் COVID - 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார ரீதியில் முகங்கொடுக்கும் ஆற்றலை பலப்படுத்தும் கருத்திட்டம் - COVID - 19 தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தினதும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தினதும் பெருந்தோட்ட மக்களின் சமூக பொருளாதார ரீதியில் முகங்கொடுக்கம் ஆற்றலை பலப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் நிதியளிக்கப்படும் கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை 04 வருடங்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற பிரதான மூன்று (03) கூறுகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்தக் கருத்திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டத்தின் 05 பிரதேச செலாளர் பிரிவுகளில் சுமார் 72,400 பேர்களும், பதுளை மாவட்டத்தின் 06 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 19,350 பேர்களும் நேரடியாகப் பயனடைவார்கள். கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவராண்மையினால் வழங்கப்படவுள்ள 06 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கொடையின் மூலம் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சார்பாக ஐக்கிய நாடுகளின் மனித குடியமர்த்தல் நிகழ்ச்சித்திட்டத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு கையளிக்கப்படும். இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் என்பவற்றுக்கிடையில் முத்தரப்பு கலந்துரையாடல் அறிக்கை உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |