2022-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் - தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் அரசாங்க சேவை ஆட்சேர்ப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக சேவைப்பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டங்கள் என்பவற்றிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிகளை நிறுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு திட்டங்களை பின்பற்றியும் அதேபோன்று ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் கீழ் காலத்திற்கு காலம் பட்டதாரிகள் உட்பட வேறு ஊழியர் தொகுதியினரை நேரடியாக அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ததன் காரணமாக அரசாங்க சேவையில் ஊழியர்களின் மிகை நிலவிய போதிலும் சில ஊழியர் வகுதிகளைச் சேர்த்த பதவிகளில் வெற்றிடம் நிலவுகின்றமை அறிக்கையிடப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆட்சேர்ப்பு செய்யும் போது பல்வேறுபட்ட முறைகளைப் பின்பற்றியதன் விளைவாக அரசாங்க சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. மேற்போந்த விடயங்களை மீளாய்வு செய்து, அரசாங்க சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொள்வதற்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமையினை இனங்கண்டு அதன் பொருட்டு கால கட்டமைப்பினை சிபாரிசு செய்வதற்கும் தற்போது அரசாங்க சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குப் பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்குமாக பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |