• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவ வழங்கல்களை கொள்வனவு செய்வதற்கு நிதியிடல்
- நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவ வழங்கல்களை இறக்குமதி செய்வதற்கு ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் நிதியுதவியின் கீழ் செயற்படும் கொழும்பு நகர மீள் உருவாக்க கருத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் கருத்திட்டம் மற்றும் அனர்த்தத்தைக் குறைக்கும் நடவடிக்கை மூலம் நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் கருத்திட்டம் ஆகிய கருத்திட்டங்களின் விடயநோக்கெல்லைகளை திருத்தியமைத்து 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட நிதியினை துரிதமாக பெற்றுக் கொடுப்பதற்கு இந்த வங்கியினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க கொழும்பு நகர மீள் உருவாக்க கருத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் கருத்திட்டத்தின் மூலம் 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் அனர்த்தத்தைக் குறைக்கும் நடவடிக்கை மூலம் நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் கருத்திட்டத்தின் மூலம் 30 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவ வழங்கல்களை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.