• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய இலக்கிய கலை விழாவை நடாத்துதல்
- இலக்கியம், கலை, அழகியல் மற்றும் அதனோடு தொடர்புடைய துறைகளை மேம்படுத்துவதற்காக அரச இலக்கிய விருது விழா, தேசிய இலக்கிய விழா மற்றும் தேசிய இலக்கிய கலை விழா வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றது. தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் குறித்த விழாக்களை இவ்வாண்டில் நடாத்துவது பொருத்தமற்றதென்பதனால், அதற்குப் பதிலாக, குறித்த இலக்கிய விழாவின் அனைத்து தனித்துவமான பண்புகளை உள்ளடக்கிய வகையில் 'தேசிய இலக்கிய கலை விழாவை' நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2022 ஒக்ரோபர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் அரசாங்க துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து இந்த விழாவை நடாத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.