• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக முழுமையான சட்ட முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்
- பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதம் சம்பந்தமான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்பு சட்டங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அத்தகைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுப்பதற்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் புலனாய்வு மற்றும் மேற்பார்வை செயற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமையொன்றை அறிமுகப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய சகல விடயங்களிலும் கவனம் செலுத்தியும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பிலான சருவதேச தர நிர்ணயங்கள் / சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் முழுமையான சட்ட முறைமையொன்றுக்கான அடிப்படை வரைவினை தயாரிக்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.