• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு ஆகியவற்றை உறுதிப்படுத்துவ தற்கான பல்துறை இணைந்த பொறிமுறை
- நிலவும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சவால்மிக்க பிரச்சினையொன்றாக உணவு பாதுகாப்பானது இனங்காணப்பட்டுள்ளதோடு, உள்நாட்டு கமத்தொழில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையும் சருவதேச ரீதியில் விலைகள் அதிகரித்துள்ளமையும் குறித்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவதற்கு காரணமாய் அமைந்துள்ளன. இந்த நிலைமையின் கீழ் எதிர்காலத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையும் பண வீக்கமும் அதிகரிக்கக் கூடுமென எதிர்பார்க்கலாம். இது உணவுப் பாதுகாப்பினை மேலும் பலவீனப்படுத்துவதற்கு காரணமாய் அமையும். தற்போதைய பொருளாதார நிலைமையின் மத்தியில் தொழில் இன்மை அதிகரித்தல் மற்றும் வீட்டு வருமானத்திற்கு நேர்ந்துள்ள மிகப்பாரிய தாக்கம் மூலம் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் உட்சிக்கல் நிலைமை, உள்நாட்டு நாணயப் பெறுமதி குறைவடைந்துள்ளதன் மீது இறக்குமதி விநியோகங்களை கொள்வனவு செய்வதில் காணப்படும் வரையறை காரணமாக உணவு விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு நிலவுகின்றது. இதற்கிணங்க, உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் துரித நடவடிக்கையாக எதிர்வரும் இரண்டு (02) வருட காலத்திற்கு குறுகியகால தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு சபை உட்பட மாகாண, மாவட்ட பிரதேச மற்றும் கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பிலான பல்துறை இணைந்த பொறிமுறையொன்றைத் தாபிப்பதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.