• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேவை மூப்புக்கு பாதிப்பேற்படாத விதத்தில் ஓய்வூதிய உரித்துடைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் லீவு வழங்குதல்
- 2022 யூன் மாதம் 13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சேவை மூப்புக்கு பாதிப்பேற்படாத விதத்தில் ஓய்வூதிய உரித்துடைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் லீவு வழங்குதல் சம்பந்தமாக சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்கு சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் ஆகக்கூடுதலாக ஐந்து (05) வருட காலத்திற்கு சம்பளமற்ற லீவு வழங்குவதற்கு உரியதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.