2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மலேசிய அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்தல், பணிக்கமர்த்துதல் மற்றும் நாட்டிற்கு திருப்பியனுப்பதல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - மலேசிய அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்தல், பணிக்கமர்த்துதல் மற்றும் நாட்டிற்கு திருப்பியனுப்பதல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையானது 2016 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலம் 2021 திசெம்பர் மாதம் 15 ஆம் திகதியன்று முடிவடைந்துள்ளது. தொடர்ந்தும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடித்து புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |