• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் இணைந்த காபன் வைப்பிலிடல் ஒருங்கிணைந்த பொறிமுறையைச் செயற்படுத்துதல்
- இலங்கை 2016 செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி அங்கீகரித்த காலநிலை மாற்றம் பற்றிய பாரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக பசுமை இல்ல வாயு வௌியேற்றத்தை குறைப்பதற்காக வலுசக்தி, கைத்தொழில், போக்குவரத்து, கழிவுப் பொருள், வனாந்தரங்கள் மற்றும் கமத்தொழில் ஆகிய துறைகளின் கீழ் தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைக்கப்பட்ட சமவாயத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. யப்பான் 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய இணைந்த காபன் வைப்பிலிடல் பொறிமுறையின் மூலம் அபிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் இணைந்து பசுமை இல்ல வாயு வௌியேற்றத்தை குறைப்பதற்கும் இவ்வாறு குறைக்கப்பட்ட அளவினை ஒப்பந்தம் செய்துகொண்ட நாட்டிற்கும் யப்பானுக்கும் இடையில் விகிதாசார அடிப்படையில் பகிர்ந்துகொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொறிமுறையினை இலங்கைக்கும் யப்பானுக்கும் இடையில் நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.