2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க தனியார் பங்குடமை தேசிய முகவராண்மையைத் தாபித்தல் - இலங்கையில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான பிரேரிப்புகளை முன்வைப்பதன் மூலம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் அரசாங்க தனியார் பங்குடமை கருத்திட்டங்களை இனங்கண்டு திட்டவட்டமான கால கட்டமைப்பின் கீழ் இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இயலுமாகும் வகையில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரசாங்க தனியார் பங்குடமை தேசிய முகவராண்மையைத் தாபிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |