2022-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பிலான முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை - கல்வித்துறை ஒத்துழைப்புக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சி, அபிருத்தி நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கீல் பல்கலைக்கழகம் என்பவற்றுக்கு இடையில் முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப் பட்டுள்ளது. வௌிநாட்டு வளங்கள் திணைக்களம், வௌிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புரை களையும் உள்ளடக்கி உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை வரையப்பட்டுள்ளதோடு, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |