• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத திணைக்களத்தின் அத்தியாவசிய சிவில் பணிகள் மற்றும் சைகை முறைமை சார்ந்த பணிகளுக்குரிய ஒப்பந்தங்களை நேரடியாக அரசாங்க அபிவிருத்தி, நிர்மாணிப்பு கூட்டுத்தாபனத்திற்கு வழங்குதல்
- இலங்கை புகையிரத திணைக்களத்தின் சிவில் நிர்மாணிப்பு பணிகள் மற்றும் சைகை முறைமை சார்ந்த பணிகளுக்குத் தேவையான மனித வலுவில் காணப்படும் பற்றாக்குறை காரணமாக புகையிர சேவையை உரிய முறையில் நடாத்திச் செல்வதில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக, அவ்வாறான நிர்மாணிப்புகள் தொடர்பில் அனுபவமிக்க 600 இற்கும் அதிகமான உறுப்பினர்களுடன் தற்போது இயங்கி வரும் அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் ரூபாவிற்கு குறைந்த ஒப்பந்தங்களை நேரடி பெறுகை வழிமுறையினைப் பின்பற்றி வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.